மாவட்ட செய்திகள்

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

துடியலூர்,

கோவை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி திருவள்ளுவர் நகர் அருகே பிருந்தாவன் நகர் உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) அமைப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கூடாது என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதே இடத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கணுவாய் தடாகம் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு தடாகம் சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், உதவி பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் சென்று விரைவில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்