கும்மிடிப்பூண்டி,
இதில் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை தொடர்பாக 20 மனுக்களும், வீட்டுமனை பட்டா கோரி 12 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு கோரி ஒரு மனுவும் என மொத்தம் 33 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை தாசில்தார் ராஜகோபால் வழங்கினார். முன்னதாக கிராம உதவியாளர் மணிகண்டன் வரவேற்றார். முடிவில் ஏழுமலை நன்றி கூறினார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வருவாய் அலுவலர் ஜானகி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இந்த முகாமில் சாதி சான்று, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 35 பேர் தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மனுக்கள் அளித்தனர். இதில் அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் பிரீத்தி, கிராம உதவியாளர் முனிரத்தினம் மற்றும் பலர் முகாமில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் லோகன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஊராட்சி செயலாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தண்ணீர்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, வீட்டுமனைபட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 165 மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பாரதி, சிவா, சுமதி, லட்சுமி, பாத்திமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.