மாவட்ட செய்திகள்

புழல் சிறை கைதி திடீர் சாவு

கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

தினத்தந்தி

செங்குன்றம்,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் சிவனேசன் (வயது 56). இவர், 2019-ம் ஆண்டு சென்னை யானைகவுனி போலீசாரால் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த மாதம் 24-ந் தேதி இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதற்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவனேசன் உயிரிழந்தார்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதி சிவனேசன், மூச்சுத்திணறல் காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து