மாவட்ட செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: நெல்லை வழியாக இயக்கப்படும் ரெயில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நெல்லை, செங்கோட்டை வழியாக இயக்கப்படும் ரெயில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நெல்லை வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் 25-ந் தேதி வரை (வியாழக்கிழமை தவிர) திருப்பரங்குன்றம்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரெயில் 11-ந்தேதி சாத்தூர்-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்.

நெல்லையில் இருந்து திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறைக்கு இணைந்து செல்லும் பாசஞ்சர் ரெயில் 7, 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28, மார்ச் மாதம் 2, 4 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்-திருச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் 10, 11, 14, 15, 17, 18, 21, 22, 24, 25-ந் தேதிகளில் சாத்தூர் -நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையேயும், 12, 16, 19, 23-ந் தேதிகளில் மதுரை-நெல்லை இடையேயும் இருமார்க்கத்திலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் வண்டி எண் 56734, 56735 மதுரை-செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரெயில்கள் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மதுரை-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதில் வியாழக்கிழமை மட்டும் வழக்கம் போல் ரெயில் ஓடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்