மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும்; காஞ்சீபுர கலெக்டர் தகவல்

தீபாவளி பண்டிகையையொட்டி கூடுதல் நேரம் ரேஷன் கடைகள் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன்கடைகளை திறந்து, ரேஷன்கடைதாரர்களுக்கு பொது வினியோக திட்ட மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வினியோகம் செய்திடுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசின் அறிவுரைகளின்படி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து, ரேஷன் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியில்

இந்த சிறப்பு ஏற்பாடு, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்காதவர்களுக்கு, 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை ரேஷன் கடைகளின் விடுமுறை தினங்கள் முடிந்த பின்னர் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பொருட்களை பெற்றுகொள்ளலாம்.

பொருட்களை பெற வரும் ரேஷன்கார்டுதாரர்கள் முக கவசம் அணிந்து வரவும், ஒரு மீட்டர் சமூக இடைவெளியில் தனிமைப்படுத்தி கொண்டு பொருட்களை பெற்று செல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்