மாவட்ட செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகள் - கலெக்டர் மலர்விழி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விதிமுறைகளை கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் 2008-ம் ஆண்டின் வெடிபொருட்கள் விதிகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பட்டாசு கடை வைக்கும் கட்டிடம் கல் மற்றும் தார்சு கட்டிடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழிகள் அமைக்க வேண்டும்.

மின்சார விளக்குகளை மட்டும் கடையில் பயன்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டிட வரைபடத்தின்-2 பிரதிகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

வாடகை கட்டிடமாக இருந்தால் நோட்டரி வக்கீலிடம் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிம கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். அதற்கான அசல் சலானுடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைத்து படிவம் 5-ல் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்