தர்மபுரி:
பாலக்கோடு தாலுகா கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்புவரா மாவட்டத்தில் போர் நடவடிக்கையின்போது கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 4- ந்தேதி வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து அவருடைய குடும்பத்திற்கு கார்கில்நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற ரூ.20 லட்சம் நிதிக்கான காசோலையை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பூபதியின் தாயார் சித்ராவிடம் வழங்கினார்.
அப்போது முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேஷ்குமார் உடனிருந்தார்.