மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்: அமைச்சர் சரோஜா வழங்கினார்

சிங்களாந்தபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சரோஜா வழங்கினார்.

தினத்தந்தி

ராசிபுரம்,

ராசிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சியில் சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், போடிநாய்க்கன்பட்டி, அரசபாளையம், கனகபொம்மன்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள், முட்டை வழங்கும் நிகழ்ச்சி சிங்களாந்தபுரத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மகுடீஸ்வரன், முன்னாள் சேர்மன் எஸ்.கே.சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதேஸ்வரி சரவணன் (மோளப்பாளையம்), பரமேஸ்வரி ரவி (போடிநாயக்கன்பட்டி), சிங்களாந்தபுரம் அ.தி.மு.க. பிரமுகர்கள் பிள்ளார் செட்டியார், லோகநாதன், அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை