மாவட்ட செய்திகள்

பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை பூக்கடை ரத்தன் பஜார் சாலை, என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.

தினத்தந்தி

இதையடுத்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் 59-வது வார்டு உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் அந்த சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை வாசிகளை அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபனா மற்றும் போலீசார் வாக்குவாதம் செய்த பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பிறகு சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்