மாவட்ட செய்திகள்

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் மேலத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது.

நீர்த்தேக்க தொட்டியின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் தொட்டி இடிந்து விழும்போது பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்