மாவட்ட செய்திகள்

ஆன்-லைன் வணிகத்தை எதிர்த்து ஓசூரில் 300 மருந்து கடைகள் அடைப்பு

ஆன்-லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து ஓசூரில் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன.

தினத்தந்தி

ஓசூர்,

ஆன்-லைன் மருந்து வணிகத்திற்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய அளவில் நேற்று ஒரு நாள் மருந்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், எம்.ஜி.ரோடு, ஏரித்தெரு, தாலுகா அலுவலக சாலை, பாகலூர் ரோடு, பழைய பெங்களூரு சாலை மற்றும் குடியிருப்பு காலனிகள், புறநகர் பகுதிகளிலும், சூளகிரி, பேரிகை, பாகலூர் ஆகிய இடங்களிலும் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தையொட்டி, ஓசூரில் 300-க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சூளகிரி, பாகலூர், பேரிகை போன்ற இடங்களிலும் உள்ள அனைத்து மருந்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்