மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்க எதிர்ப்பு: உருக்கு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி அருகே மீண்டும் திறக்க முடிவு செய்ததையடுத்து மூடப்பட்ட இரும்பு உருக்கு தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜகண்டிகை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தாது மூலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வந்தது. தொழிற்சாலையால் அதிக அளவில் காற்று மாசு அடைவதாகவும், தொழிற்சாலையின் ஆக்கிரமிப்பில் கிராமத்திற்கு சொந்தமான நீர் நிலைகள் இருந்து வருவதாகவும் அந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதனையடுத்து அந்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த நிலையில், அந்த தொழிற்சாலையை மற்றொரு தனியார் நிறுவனம் வாங்கி மீண்டும் திறக்க முடிவு செய்திருப்பதாக தகவல் பரவியது.

தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையை மீண்டும் திறக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மூடப்பட்ட தொழிற்சாலையின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் சுப்பிரமணி, மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி, வருவாய் ஆய்வாளர் ரதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கிராம மக்கள் தங்களது 3 மணி நேர போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்