மாவட்ட செய்திகள்

வந்தவாசியில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலைமறியல்

வந்தவாசியில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலைமறியல்

தினத்தந்தி

வந்தவாசி,

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பெரியகாலனி பகுதிக்கு கடந்த சில நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 11-45 மணியளவில் பாலுடையார் தெரு- சன்னதிதெரு சந்திப்பிலும், குளத்துமேட்டு சாலையிலும் காலிகுடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலர் காலிபானைகளை தரையில் போட்டு உடைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உடனடியாக மாலைக்குள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டம் சுமார் 45 நிமிடம் நடந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து