புதுச்சேரி,
சேதமடைந்த இந்த குடியிருப்பை சீரமைத்து தரக்கோரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவாவிடம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க அரசு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சீரமைப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அந்த கட்டிடத்தில் சிவா எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர் அணில்குமார், இளநிலை பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.