மாவட்ட செய்திகள்

8 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பழனி அருகே உள்ள வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட முயன்ற 8 பேர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

பழனி:

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் மர்ம கும்பல் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பழனி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் காவலப்பட்டி தன்னாசியப்பன் கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வனப்பகுதியில் நாய்களுடன் நின்ற 8 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், காவலப்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 65), பழனிசாமி (55), தங்கவேலு (48), அருண் (25), கணேசன் (23), தமிழ்செல்வன் (23), அ.கலையம்புத்தூரை சேர்ந்த பாலன் (57), சண்முகம்பாறையை சேர்ந்த கிருஷ்ணன் (48) என்பதும், நாய்களை பயன்படுத்தி, வனவிலங்குகள் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த குத்தீட்டி, டார்ச் விளக்கு மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய 6 நாய்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற முருகன் உள்பட 8 பேருக்கும் தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய நாய்களை பழனியில் உள்ள விலங்குகள் நல அமைப்பிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து