மாவட்ட செய்திகள்

நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி

திண்டுக்கல் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நிலம் வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், கேதையறும்பு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (43), ஓடைப்பட்டியை சேர்ந்த ராஜூ (45), தும்மிச்சம்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் (47) ஆகியோர் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக என்னிடம் கூறினர். அதை நம்பி நிலம் வாங்குவதற்காக ரூ.10 லட்சம் கொடுத்தேன். ஆனால் நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்பவுல்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் லட்சுமணன் நேற்று கைது செய்யப்பட்டார். மீதமுள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து