மாவட்ட செய்திகள்

விபத்தில் உயிரிழந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.19½ லட்சம் இழப்பீடு; சென்னை கோர்ட்டு உத்தரவு

சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 41). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 2018-ம் ஆண்டு தனது மகன் செல்லத்துரையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

தினத்தந்தி

ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையில் காவனூர் அருகே சென்ற போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த ராணி உயிரிழந்தார். இதையடுத்து ரூ.60 லட்சம் இழப்பீடு கோரி ராணியின் கணவர் தாமோதரன், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், மனுதாரருக்கு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக 19 லட்சத்து 32 ஆயிரம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்