மாவட்ட செய்திகள்

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி; 7 கடைகளுக்கு ‘சீல்’

கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ரூ.35 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த கடைக்காரர்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கியும் வாடகை செலுத்தாதால் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

தினத்தந்தி

சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இதில் சில கடைகளை ஆம்னி பஸ் புக்கிங் அலுவலகமாக நடத்தி வருகின்றனர். அதில் 7 கடைகளுக்கு சில வருடங்களாக வாடகை தராமல் ரூ.35 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. வாடகை பாக்கியை செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கியும் வாடகையை செலுத்தவில்லை.

இதையடுத்து வாடகை பாக்கி வைத்திருந்த 7 கடைகளுக்கு நேற்று சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர். வாடகை பாக்கியை முழுமையாக செலுத்திய பிறகு கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை