மாவட்ட செய்திகள்

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5,380 கோடி நிவாரணம்; முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் ஏராளமான விளைபயிர்கள் நாசமானது. கிட்டத்தட்ட 34 மாவட்டங்களில் உள்ள 352 தாலுகாக்களில் 94.53 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

மும்பை,

விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இந்தநிலையில் மராட்டியத்தில் அரசியல் குழப்பம் காரணமாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சேதமடைந்த 2 ஹெக்டேர் நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு ரூ.8 ஆயிரமும், தோட்டக்கலை பயிர்களுக்கு 2 ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரமும் நிவாரணம் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள தேவேந்திர பட்னாவிஸ் தனது பணிகளை தொடங்கினார். நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 380 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதனை தனது டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்து இருந்தார். கடந்த 2-ந் தேதி காபந்து முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த தேவேந்திர பட்னாவிஸ் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்