மாவட்ட செய்திகள்

போலி இணையதளம் மூலம் ரூ.6¼ கோடி மோசடி 10 பேர் கைது

போலி இணையதளம் மூலம் ரூ.6 கோடியே 25 லட்சம் மோசடி செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை தாதர் கிழக்கில் உள்ள பன்னாட்டு தொழில் மைய சேவை கட்டிடத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் போலி இணைய தளம் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்ற வர்த்தகம் செய்து பணமோசடி நடந்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு ஒரு போலி இணைய தளம் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்ற வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக தொகையுடன் திருப்பி தருவதாக கூறி சுமார் 500 பேரிடம் ரூ.6 காடியே 25 லட்சம் மோசடி செய்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த தன்வீர், ஆசாத், சாருக், வியாங்ட்சலம், பய்யாஜ், சஞ்சய், பர்வேஸ், இம்ரான் கான், முகமது சேக், அசாருதீன் சேக் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்கள் இந்த மோசடிக்கு பயன்படுத்தி வந்த 96 மடிக்கணினிகள், 17 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மோசடி தொடர்பாக கைதான 10 பேர் மீதும் மாட்டுங்கா போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை