திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடையில் கூட்டம் சேராமல் இருக்க தினமும் 200 பேருக்கு டோக்கன் வினியேகம் செய்யப்படுகிறது. டோக்கன் பெற்ற அனைவருக்கும் 15-ந்தேதி முதல் ரேஷன்கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்.
அதில் ஏதேனும் பிரச்சினகள், குறைபாடுகள் இருப்பின் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கே அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்:04179 -222111-க்கு தெடர்பு கெண்டு புகார் அளிக்கலாம், என கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.