சிம்ம வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா வந்தார்.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.