மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்; சப்-இன்ஸ்பெக்டர் கைது தாயும், பெரியம்மாவும் சிக்கினர்

துப்பாக்கி முனையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாய் மற்றும் பெரியம்மாவும் சிக்கினார்கள்.

தினத்தந்தி

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 38). மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள இவர், மாதவரம் துணை கமிஷனரின் தனிப்படையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும், சென்னையை அடுத்த மணலி சின்னசேக்காடு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரேஷன் கடை ஊழியரான பெண் ஒருவருக்கும் கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

அப்போது தனது கள்ளக்காதலியின் மகளான 15 வயதான 10-ம் வகுப்பு மாணவி மீது சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாருக்கு மோகம் ஏற்பட்டது. அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், துப்பாக்கிமுனையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாணவியின் தாயும், அவருடைய சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர்.

பாலியல் பலாத்கார சம்பவத்தை தந்தையிடம் சொல்லக்கூடாது எனவும் மாணவியை மிரட்டினர். ஆனால் மாணவி, தனக்கு நடந்த கொடுமையை தனது தந்தையிடம் கூறி அழுதாள்.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, மாதவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணகி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்