மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்ககளை போலீசார் கைப்பற்றினர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் கணேஷ் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மளிகை கடையில் வினோத் குமார்(வயது 25), என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து மளிகை கடையில் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் வினோத்குமாரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்