மாவட்ட செய்திகள்

போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது

போதை மாத்திரைகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தினத்தந்தி

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலகன்னிச்சேரி கிராமத்தை சேர்ந்த முனியசாமி(வயது 31) என்பதும், இவர் மீது ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தரியவந்தது. இதையடுத்து முனியசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 1 கிலோ போதை மாத்திரை தூள் மற்றும் 2 அரிவாள்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்