மாவட்ட செய்திகள்

பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணை குட்டைகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பண்ணை குட்டைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளின் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் மழைநீரை பண்ணைக்குட்டைகள் அமைத்து சேமிப்பதன் மூலம் பயிருக்கு தேவையான காலங்களில் பாசனம் செய்ய பயன்படுத்த முடியும். அதே சமயம் அந்த பகுதியில் நிலத்தடிநீர் செறிவூட்டப்பெற்று நிலத்தடிநீர் மட்டம் காக்கப்படுவதோடு, கடல்நீர் உட்புகாவண்ணம் நிலத்தடிநீரின் பண்பும் காக்கப்படும். பண்ணைக்குட்டையில் சேமிக்கப்படும் மழை நீரில் மீன்களை வளர்த்தும் பயன்பெற முடியும்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தில் மேம்படுத்தப்பட உள்ள இளையரசனேந்தல், பரிவல்லிக்கோட்டை, பள்ளக்குறிச்சி, உடன்குடி ஆகிய 4 பிர்க்காக்களில் அமைந்துள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் திட்டத்தை முழுமையாக பயன்படுத்தினால் இந்த பகுதியில் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு நிலத்தடிநீர் வளம் காக்கப்படும்.

விண்ணப்பம்

இந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 139 பண்ணை குட்டைகள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அமைக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 515 பண்ணை குட்டைகள் 100 சதவீத மானியத்தில் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற இதுவரை 334 விவசாயிகள் மட்டுமே தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். எனவே இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கம்ப்யூட்டர் பட்டா, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் வட்டாரத்திற்கு உரிய வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள் கோவில்பட்டி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் வட்டார விவசாயிகள் தூத்துக்குடி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும், திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் திருச்செந்தூர் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்