மாவட்ட செய்திகள்

கழிவுநீர் லாரி மோதி தொழிலாளி பலி

கழிவுநீர் லாரி மோதி தொழிலாளி மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த பல்லாவரம், அரசமரம் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் (வயது 48). தச்சுத்தொழிலாளி. இவருடைய மகன் அஜய் (23). நேற்று காலை தந்தை, மகன் இருவரும் இருசக்கர வாகனத்தில் பம்மல் நோக்கி சென்றனர்.

பல்லாவரம்-பம்மல் சாலையில் எச்.டி.எப்.சி. வங்கி அருகே சென்றபோது இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியதில் குப்பன் சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு