மாவட்ட செய்திகள்

ஊஞ்சலூர் அருகே வாய்க்காலில் பிணமாக கிடந்த தையல் தொழிலாளி; போலீசார் விசாரணை

ஊஞ்சலூர் அருகே வாய்க்காலில் தையல் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூரை அடுத்த பாசூர் காலிங்கராயன் வாய்க்கால் மதகின் அருகில் வாயில் நுரை தள்ளியபடி ஆண் பிணம் கிடப்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டம் கனக்கம்பாளையத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 54). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி. இவருக்கு உடல் நலம் சரியில்லை.

இதனால் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு சென்றார். இந்த நிலயில் பாசூர் காலிங்கராயன் வாய்க்கால் மதகு பகுதியில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

ஆஸ்பத்திரிக்கு போவதாக கூறிவிட்டு சென்ற அவர் எதற்காக இ்ங்கு வந்தார்? விஷம் குடித்து தற்கொல செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்