மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் பள்ளி ஆசிரியர் கைது

ஆசிரியர் தன்னிடம் பயின்றுவரும் மாணவிகளிடம் சாக்லெட் மற்றும் செல்போன் கொடுத்து அந்த மாணவிகளிடம் விளையாடுவது போல் நடித்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தில் அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை திருவள்ளூர் நகரை சேர்ந்த ஜெய கோபி (வயது 46) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர் ஜெய கோபி தன்னிடம் பயின்றுவரும் மாணவிகளிடம் சாக்லெட் மற்றும் செல்போன் கொடுத்து அந்த மாணவிகளிடம் விளையாடுவது போல் நடித்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சில மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியதையடுத்து நேற்று முன்தினம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளியை சூழ்ந்து ஆசிரியரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு அவர் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும் விசாரித்தனர். பின்னர், போலீசார் ஜெய கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு