மாவட்ட செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் கைது

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரகடம் பகுதியில் இரு சக்கர வாகனம் தயாரிக்கும் ராயல் என்பீல்ட் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்வாகம் முன்வரவில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க வேண்டும். நிர்வாகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 24-ந்தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்திலும் பின்னர் தொழிற்சாலைக்கு வெளியில் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக தொழிலாளர் துறை இணை ஆணையர் முன்பு கடந்த 3-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்