மாவட்ட செய்திகள்

வேலூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

தினத்தந்தி

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 350 படுக்கைகள் கொண்ட இந்த வார்டில் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். இங்கு தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 30 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர், நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை கல்லூரி டீன் செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உள்ளிட்டோர் பழங்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் 24 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும், அவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு