மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் அருகே ஏரியில் மண் திருட்டு; லாரி பறிமுதல்

மறைமலைநகர் அருகே ஏரியில் மண் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள செங்குன்றம் ஏரியில் அடிக்கடி மண் திருடப்பட்டு லாரி மூலம் கடத்தப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்து வந்தனர். நேற்று மதியம் செங்குன்றம் ஏரியில் மண் திருடப்படுவது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் லாரி டிரைவர் உள்பட மண் திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. போலீசார் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மண் திருடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு