மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் சோலார் மின் உற்பத்தி நாளை தொடங்குகிறது

சோலார் மின் உற்பத்தி மூலம், விமான நிலையத்தின் மின்சார செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்தில் புதிய விமான நிலைய முனையம் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சோலார் மின் உற்பத்தி மூலம், விமான நிலையத்தின் மின்சார செலவினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திருச்சி விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்.இ.டி. விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டன. மேலும், விமான நிலைய வளாகத்தில் சோலார் தகடுகள் அமைக்கப்பட்டு ஒரு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதற்காக விமான நிலையத்தில் வடக்குப் பகுதியில் ரூ.4 கோடியே 60 லட்சம் செலவில் சோலார் தகடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா நாளை விமான நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு