மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி வெட்டிக்கொலை குடிக்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்

உளுந்தூர்பேட்டை அருகே மது குடிக்க பணம் தராததால் மாற்றுத்திறனாளி தந்தையை வெட்டி படுகொலை செய்த அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த அவரது மகனான, கோழிக்கறி கடை நடத்தி வரும் விஜயராமு(35) பாலுசாமியிடம் மது குடிக்க பணம் கேட்டபோது அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜயராமு வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து பாலுசாமியை வெட்டி படுகொலை செய்தார். இதை தடுக்க முயன்ற அவரது தாய் வெள்ளையம்மாளையும் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயராமுவை வலைவீசி தேடி வருகிறார்கள். மது குடிக்க பணம் தர மறுத்த மாற்றுத்திறனாளி தந்தையை மகனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை