மாவட்ட செய்திகள்

மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கும்மிடிப்பூண்டி,

சென்னை சென்டிரல்-கூடூர் பிரிவு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே காலை 11.15 மணி, மதியம் 1.20 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், சூலூர்ப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இடையே காலை 10.10 மணி, மதியம் 12.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், கும்மிடிப்பூண்டி-சூலூர்ப்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு