மாவட்ட செய்திகள்

வல்லக்கோட்டை ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில், கோவில் பின்பகுதியில் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற முருகன்கோவில் உள்ளது. கோவில் பின்பகுதியில் செல்லும் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

தேங்கி கிடக்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பதில்லை. குப்பைகளை அகற்றாமல் அங்கேயே தீயிட்டு எரித்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்பட அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த குப்பைகளை தீயிட்டு எரிக்காமல் அகற்ற வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டுவதற்கு கூடுதல் குப்பை தொட்டிகளை அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு