மாவட்ட செய்திகள்

வேன் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று இரவு பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம்-மாம்பாக்கம் மெயின் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

சித்தாலப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரகாஷ், வேன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு வேன் டிரைவரான சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து