மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மாணவர் சேர்க்கை

திருவாரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) மாணவர் சேர்க்கை நடைபெறும் என முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன் தெரிவித்தார்.

தினத்தந்தி

திருவாரூர்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான குழந்தைகளை தேர்வு செய்யும் பணி கடந்த மே மாதம் 31-ந் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு சிலர் சேர்க்கைக்கு வராததால் நிலுவையாக உள்ள காலி இடங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு துறை சார்ந்த பிரதிநிதி முன்னிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, ஏற்கனவே இணைய வழியாக விண்ணப்பித்து சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படாத குழந்தைகளின் பெற்றோர் நாளை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று காலியாக உள்ள இடத்தில் தங்கள் குழந்தையை சேர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு