மாவட்ட செய்திகள்

சேத்துப்பட்டு பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியல்

சேத்துப்பட்டு பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

அந்தக் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் தினமும் காலை சேத்துப்பட்டில் இருந்து அரசு பஸ் தடம் எண்:148-ல் பயணம் செய்வார்கள்.

அந்த பஸ் ஒருசில நேரத்தில் திடீரென நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை என்றும் தெரிகிறது.

இதைக் கண்டித்து மாணவ-மாணவிகள் நேற்று சேத்துப்பட்டு காமராஜர் பஸ் நிலையம் அருகில் ஆரணி சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நேரத்தில் தடம் எண்:148 என்ற பஸ்சை இயக்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் தடம் எண்:422 பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்றனர். இதனால் சேத்துப்பட்டில் நேற்று காலை 9 மணியில் இருந்து 9.30 மணிவரை அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்