புறநகர் மின்சார ரெயில்கள் 
மாவட்ட செய்திகள்

நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் வார நாட்கள் அட்டவணைபடி புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கம்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னையில் பல்வேறு கட்ட ஊரடங்குக்கு பிறகு அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மின்சார ரெயிலில் பயணிக்க அனைத்து பயணிகளுக்கும் தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.

தினத்தந்தி

அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், குழந்தைகள் தவிர மற்றவர்கள் மின்சார ரெயிலில் பயணிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 500 மின்சார ரெயில் சேவைகள் சென்னையில் இயக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் ஒரு மணி நேர இடைவெளியில் குறைவான மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.

இந்தநிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதி (நாளை) முதல் 3-ந்தேதி வரை, 410 மின்சார ரெயில் சேவைகள் கடந்த 27-ந்தேதி வரை இயக்கப்பட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

நாளை (புத்தாண்டு) மற்றும் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, வாரநாட்கள் அட்டவணைப்படி பயணிகளின் வசதிக்காக 410 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்