மாவட்ட செய்திகள்

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் காஷ்மீர் குறித்து பேசுவதா? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி மக்களை திசை திருப்புவதா? என்று அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை வந்த பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவினை நீக்கிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து மராட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தேர்தல் மராட்டியத்தில் நடக்கிறது, ஜம்மு- காஷ்மீரில் இல்லை என்பதை நான் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு நினைவுபடுத்திக்கொள்கிறேன். 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது பற்றி பேச விரும்பினால் அதற்கு அவர் ஜம்மு- காஷ்மீர் செல்லவேண்டும். தேர்தல் நடக்கும் மராட்டியத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி மக்களை திசைதிருப்பும் தந்திரத்தை கடைப்பிடிக்க வேண்டாம்.

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மராட்டியத்தின் கடன் இரட்டிப்பாகி உள்ளது. முந்தைய அரசின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, இந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளன. சிறு, குறு தொழில்கள் நசிவுறுவதால் வேலைவாய்ப்பின்மை பெருகிக்கொண்டே செல்கிறது.

ஜம்மு- காஷ்மீரில் பா.ஜனதா சில ஆண்டுகள் மெகபூபா முக்தியுடன் ஆட்சியில் அங்கம் வகித்தது. தற்போது அவரை ஏன் தடுப்பு காவலில் வைத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்