மாவட்ட செய்திகள்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தொட்டியத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

தொட்டியம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மேற்கு மாவட்ட அமைப்பாளர் பாபு தலைமையில் நேற்று திருச்சி-சேலம் சாலையில் உள்ள தனியார் வங்கி எதிரே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், தொட்டியம் மேற்கு ஒன்றிய தலைவர் கருணாகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகேசன், கரூர் மாவட்ட நிர்வாகி குழந்தைவேல், நாமக்கல் மாவட்ட நிர்வாகி இளங்கோவன் ஆகியோர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றிய தகவலறிந்த தொட்டியம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த போராட்டக்காரர்கள் கீழே இறங்கி வந்தவர். அவர்கள் 6 பேரையும் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு