மாவட்ட செய்திகள்

பூதப்பாண்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதகர் கைது

பூதப்பாண்டியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதகரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

பூதப்பாண்டி,

கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு தாமரைகுளம் கல்குளம்பொத்தை வடக்கு காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). இவர் பூதப்பாண்டியை அடுத்த செம்பொன்விளை ரட்சனிய சேனை ஆலயத்தில் போதகராக உள்ளார்.

இவருக்கு ரூபிபெல்லா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷ்குமாரை பல இடங்களில் தேடினர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கைது

இந்த நிலையில் சம்பவத்தன்று சுரேஷ்குமார் ரட்சனிய சேனை குடியிருப்புக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்ததாக தெரிகிறது. இதனால் ரூபிபெல்லா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுரேஷ்குமாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் வெட்டு கத்தியை காட்டி ரூபிபெல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ரூபிபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு