மாவட்ட செய்திகள்

மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

மதுராந்தகம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

குடும்பத்தகராறு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கெண்ரச்சேரியைச் சேர்ந்தவர் சின்ராசு. மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வராணி (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் மதுராந்தகம் அடுத்த கெண்டிரச்சேரியில் குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகளும் 3 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். செல்வராணிக்கும் அவரது கணவருக்கும் பல நாட்களாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து செல்வராணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது தந்தை மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அவரது உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வராணிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. லட்சுமிபிரியா விசாரித்து வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்