மாவட்ட செய்திகள்

அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது

குமரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களிலும் அம்மா திட்டத்தின் 5–ம் கட்ட சிறப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.

நாகர்கோவில்,

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தென்தாமரைகுளம் வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும், தோவாளை தாலுகாவில் தோவாளை வருவாய் கிராமத்துக்கு, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கல்குளம் தாலுகாவில் குருந்தன்கோடு ஆ வருவாய் கிராமத்துக்கு கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

இதே போல் திருவட்டார் தாலுகாவில் தும்பக்கோடு ஆ வருவாய் கிராமத்துக்கு திருநந்திக்கரை அரசு தொடக்கப்பள்ளியிலும், விளவங்கோடு தாலுகாவில் வெள்ளாங்கோடு வருவாய் கிராமத்துக்கு அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கிள்ளியூர் தாலுகாவில் ஏழுதேசம், சி வருவாய் கிராமத்துக்கு கலிங்கராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இந்த முகாமில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல் போன்ற பொதுவான மனுக்களை பொது மக்கள் அளித்து தீர்வு காணலாம்.

மேற்கண்ட தகவல் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை