மாவட்ட செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாய தொழிலாளர்கள் கருப்புகொடி ஆர்ப்பாட்டம்

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே கைவிடக்கோரி, விவசாய தொழிலாளர்கள் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காரைக்கால்,

காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகே கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பிச்சையன் முன்னிலை வகித்தார்.

தேசிய விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ராமமூர்த்தி, மாநில தலைவர் பாலகிருஷ்ணன், கன்வீனர் பெருமாள், மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் புண்ணியமூர்த்தி, துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிடவேண்டும். தீபாவளியை முன்னிட்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை 200 நட்களாக மாற்றி, தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தவேண்டும். காவிரிநீர் கடைமடை பகுதிக்கு வருவதை உறுதி செய்யவேண்டும். விவசாய தொழிலாளர்கள் நலவாரியத்தை உடனே நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு