மாவட்ட செய்திகள்

குப்பம் அருகே விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம்

குப்பம் அருகே விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி சவுளூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி(வயது 64) விவசாயி. இவருடைய மகன் மோகன்குமார்(35). முனிசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாட்டு மருந்து சாப்பிடுவதற்காக ஆந்திரா மாநிலம் பலமனேர் பகுதிக்கு மகனுடன் காரில் சென்றார். இவர்களுடன் முனிசாமியின் சகோதரி கிருஷ்ணம்மாள் என்கிற லட்சுமி, அவருடைய மகன் சேகர், உறவினர் ரெங்கப்பா ஆகியோரும் சென்றனர். நாட்டு மருந்து சாப்பிட்ட பின்னர் அவர்கள் அங்கிருந்து தர்மபுரிக்கு புறப்பட்டனர்.

சித்தூர் அருகே வந்த கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் முனிசாமி உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று சொந்த ஊரான பழைய தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது அங்கு திரண்டு இருந்த உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. பின்னர் 4 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. ரெங்கப்பாவின் உடல் மட்டும் கொளகத்தூர் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

விபத்தில் முனிசாமி, அவருடைய மகன் மோகன்குமார், சகோதரி கிருஷ்ணம்மாள், அவருடைய மகன் சேகர் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் உயிரிழந்த மோகன்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர். பின்னர் விவசாய பணிகளில் ஈடுபட்டார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்