மாவட்ட செய்திகள்

பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பலி

உச்சிப்புளி அருகே பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

பனைக்குளம்,

ராமேசுவரம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவருடைய மகன் பார்த்திபன் (வயது27). இதே பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவருடைய மகன் மோகன்(25). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக் கிளில் உச்சிப்புளி அரியமான் கடற்கரைக்கு சென்று விட்டு ராமேசுவரம் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது சாத்தக்கோன்வலசை சாலையை கடக்கும்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

வாலிபர் பார்த்திபன் மோட்டார் சைக்கிளுடன் பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உச்சிப்புளி போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்