மாவட்ட செய்திகள்

விளையாட்டாக வாயில் வைத்த பட்டாசு வெடித்து சிறுவன் பலி

புல்தானா அருகே விளையாட்டாக வாயில் வைத்திருந்தபோது பட்டாசு வெடித்து சிறுவன் பலியானான்.

தினத்தந்தி

மும்பை,

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மக்கள் மத்தியில் பட்டாசு வெடிக்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. பட்டாசுகளை சரியாக கையாளாவிட்டால் அது உயிருக்கு உலை வைத்து விடும் என்பதற்கு உதாரணமாக விபரீத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

புல்தானா மாவட்டம் பிம்பல்காவ் கிராமத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சஞ்சய் கவதே (வயது 7) என்ற சிறுவன் வெடிக்காத பட்டாசு என நினைத்து, அதனை விளையாட்டாக வாயில் வைத்து உள்ளான். எதிர்பாராத விதமாக பட்டாசை கடித்து விட்டான். திடீரென பட்டாசு வெடித்து விட்டது.

இதில் அவனது வாய் சிதறி போனது. நிலைகுலைந்து கிடந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்