மாவட்ட செய்திகள்

சாந்திவிலியில் தொழில் அதிபர் தூக்கில் தொங்கினார் கொலையா? போலீஸ் விசாரணை

சாந்திவிலியில் தொழில் அதிபர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை சாந்திவிலியை சேர்ந்தவர் தொழில் அதிபர் அவினாஷ். பாதுகாவலர்களை பணியில் அமர்த்தும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது வீட்டில் நண்பர் அமித் என்பவர் தங்கியிருந்தார். இவர் அவினாஷின் நிறுவனத்தின் பண விவகாரங்களை கவனித்து வந்தார். இந்த நிலையில், அவினாஷ் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமித், சாக்கிநாக்கா போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவினாசுக்கும், அவரது சகோதரர் ரித்துராஜுக்கும் பணப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், சம்பவத்திற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அமித் போலீசாரிடம் கூறினார்.

தான் வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் அவினாசை ரித்துராஜ் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அமித் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து தான் தனது சகோதரரை கொலை செய்து விட்டு நாடகமாடுவதாக ரித்துராஜ் கூறியிருக்கிறார்.

அவினாசின் மர்மச்சாவு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அமித் அல்லது ரித்துராஜ் அவரை கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனரா? என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்